சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி ..
#எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். குட்டியாக இருக்கும் #யானையை சின்ன சங்கிலியால் கட்டி வைப்பார்கள் ஆரம்ப நாட்களில் போராடும் சங்கிலியை அறுக்க முடியாது யானை பெரிதாக வளர்ந்து விடும் அதே குட்டி சங்கிலி ஒரே இழுவையில் சங்கிலி சுக்கு நூறாகிவிடும் ஆனால் முயற்ச்சி செய்யாது காரணம் சங்கிலி அறுபடாது என்கிற எண்ணம் அதன் மூளையை மழுங்கடித்தவிடும் அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் ...